கடலூர் மாவட்டத்தில் உள்ள லால்புரம் முருக பிரியா நகரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரோஜா என்ற மனைவியும், ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். மகேந்திரன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு மகேந்திரன் சிதம்பரம் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அதிகாலை 3:30 மணிக்கு ரோந்து பணியை முடித்துவிட்டு சிதம்பரம் நகர காவல் நிலையத்திற்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக போலீசார் மகேந்திரனை மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மகேந்திரனை பரிசோதனை செய்த டாக்டர் மாரடைப்பு ஏற்பட்டதால் மகேந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மகேந்திரனின் உடல் அஞ்சலி செலுத்துவதற்காக வீட்டில் வைக்கப்பட்டது. இதனை அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மற்றும் போலீசார் மகேந்திரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.