கடலூர் மாவட்டத்தில் உள்ள ராசாபேட்டை சுனாமி நகரில் தீபன்(20) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான தீபனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு திவான் புதுக்குப்பம் பகுதிக்கு சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் தீபனை கைது செய்தனர். இந்த விளக்கினை விசாரித்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீபனுக்கு 4000 அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.