கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 7 மாத ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திடீரென மூச்சு திணறளால் அவதிப்பட்ட குழந்தையை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு நவீன கருவி மூலம் டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது குழந்தையின் மூச்சுக்குழலில் சிறிய பிளாஸ்டிக் துண்டு சிக்கி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையான (என்டோஸ்கோப்பி) மூலம் காது, மூக்கு, தொண்டை பிரிவு பேராசிரியர் சரவணன், மயக்கவியல் டாக்டர் பேராசிரியர் கல்யாண சுந்தரம் தலைமையில் மருத்துவ குழுவினர் பிளாஸ்டிக் துண்டை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர். இவர்களை மருத்துவமனை டீன் நிர்மலா பாராட்டி உள்ளார்.