தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் சென்னையில் 40-வது மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 16, 17 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் கரூர் மாவட்டத்தின் சார்பில் யூகி சிட்டோ ரிவ்யூ கராத்தே மாணவி மணிமொழி கலந்து கொண்டு  இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

இதனையடுத்து மணிமொழிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பின்னர் வெற்றி பெற்ற மணிமொழியை தமிழ்நாடு கராத்தே சங்கத்தின் டெக்னிக்கல் டைரக்டர் தாய் சென்சாய் ராஜசேகரன் கரூர் மாவட்ட கராத்தே சங்கத்தின் செயலாளர் ரென்சி செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.