ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளத்துபாளையத்தில் குணசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 5 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான குணசேகர் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த நந்தினி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.