கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பட்டாசு கடைகள் வைக்க உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தார். இது தொடர்பாக கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் வரட்டனபள்ளி பகுதியில் பட்டாசு கடைகளில் போலீசாரும், அதிகாரிகளும் தீவிர சோதனையில்  ஈடுபட்டனர்.

அப்போது ஒரு கடையில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் பட்டாசு கடைக்கு சீல் வைத்தனர். மேலும் அனுமதியின்றி பட்டாசுகளை வைத்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.