ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் முத்துமாரி தனது குழந்தை மற்றும் மாமியாருடன் காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணத்திற்கு ரயிலில் சென்றார்.

அந்த ரயில் தக்கோலம் ரயில் நிலையத்தை வந்தடைந்ததும் மர்ம நபர் ஒருவர் முத்துமாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது  காதில் அணிந்திருந்த 4 கிராம் தங்க கம்மலை பறித்து சென்றார். இதுகுறித்து முத்துமாரி அரக்கோணம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.