கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த போது அதே ஊரில் வசிக்கும் கூலி தொழிலாளியான முருகன் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் சிறுமி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முருகனை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முருகனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.