தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீன்பிடி உபகரணங்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

அதேபோல் பாகிஸ்தான் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மீறி வருகின்றனர். இவர்களின் வன்முறை செயல்கள் பெரும் அதிர்ச்சி அளிப்பது மட்டுமில்லாமல் கண்டனத்திற்குரியது. இதனை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்துச் சென்று மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க உயர்நிலை அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.