அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை, இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் சந்தித்து பேசினார். இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் ரவிக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப அதிகம்; கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை? என பழமொழி உண்டு, ஆளுநருக்கு அது பொருந்தும் என விமர்சித்த அவர், வாய்க்கொழுப்பை அடக்காவிட்டால், தமிழ்நாடு ஆளுநர் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வந்தால் தமிழகத்தில் நடமாட முடியாத நிலை ஏற்படும். மேலும் காரல் மார்க்ஸ் குறித்து ஆளுநர் பேசியதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வருகின்ற 28-ம் தேதி போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.