வரும் மார்ச் 4ம் தேதி அன்று தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவங்கங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின்  ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் 1 முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்கு பதிலாக மார்ச் 13ம் தேதி (திங்கள்) அன்று 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் திடீர் ஆய்வு திட்டத்தால் ஒரு நாள் விடுமுறை தேதி மாற்றப்பட்டுள்ளது.