திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் வார விடுமுறை தினம் என்பதால் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொடைக்கானலுக்கு வந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பேரிஜம் ஏரி, குணாகுகை, பில்லர் ராக் மோயர் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். இதனையடுத்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். காலை முதல் மாலை வரை குளுமையான சூழல் நிலவி அவ்வ போது சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.