திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோரிக்கை மனுடன் வயதான தம்பதியினர் வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தவசிமடை சடையன்களம் பகுதியில் வசிக்கும் விவசாயி ஆரோக்கியசாமி(65), அவரது மனைவி மரிய பாக்கியம் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் வயதான தம்பதியினருக்கு சொந்தமான நிலத்தை இளைய மகனும், அவரது மனைவியும் அபகரித்து விட்டனர். மேலும் அவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தம்பதியினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.