கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்க வந்த தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,   ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை  வருவதற்கு முன்பாகவே…. மக்களுக்கு எந்தெந்த பகுதிகளில் வானிலை ஆய்வு மையம் புயல் – வெள்ளம் – கனமழை செய்தி வெளியிடுகின்றதோ,  அதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு… அரசு உரிய முறையிலே  செயல்பட்டிருந்தால் இன்றைக்கு சென்னையில் மிக்ஜாம்  புயல் பாதிப்பில் இருந்தும் மக்களை மீட்டிருக்கலாம்.

இப்பொழுது தென் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் இருந்தும் மக்களை பாதுகாத்திருக்கலாம். ஆனால் விடியா திமுக முதலமைச்சர் திரு.  ஸ்டாலின் அவர்கள்….  வீர வசனம் பேசுகிறார். ஏதோ சென்னையில் புயலால் கனமழை பெய்ததில் விரைவாக செயல்பட்டு மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை என்ற செய்தியை டெல்லியில் இருந்து வெளியிட்டு இருக்கிறார். இது வேடிக்கையாக இருக்கின்றது. இதை ஊடகத்திலும், பத்திரிக்கையிலும் மக்கள்

எந்த அளவுக்கு இந்த அரசை விமர்சனம் செய்தார்கள் என்று அவர் பார்க்கவில்லை போல் இருக்கிறது. ஊடக நண்பருக்கும்,  பத்திரிக்கை நண்பருக்கும் நன்றாக தெரியும். கடந்த 03.12.2023 அன்று மாலையிலிருந்து அடுத்த நாள் 12 மணி வரை 04.12.2023 மதியம் வரை தொடர்ந்து கனமழை,  சென்னை…. சுற்றியுள்ள புறநகர் மாவட்டம்….

திருவள்ளூர் மாவட்டம்… காஞ்சிபுரம் மாவட்டம்….. செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர் கனமழை பொழிந்தது. இதனால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்து…..  வீட்டில் இருந்து மக்கள் வெளியே பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு,  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். அதெல்லாம் இந்த முதலமைச்சருக்கு  கண்ணுக்கு தெரியவில்லை. ஏதோ  மத்திய குழு வந்ததாம்… பார்வையிட்டதாம்… பாராட்டி விட்டு சென்றதாம்… அங்கு இருக்கின்ற மக்களிடம் போய் கேட்டால் தான்  என்ன பாராட்டு இந்த  அரசுக்கு கிடைக்கும் என்பது இந்த அரசுக்கு தெரியும் ? இந்த முதலமைச்சருக்கு தெரியும் என தெரிவித்தார்.