மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் மருதுபாண்டியர் நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று  வினோத்தும், அவருடன் கண்டக்டராகபணிபுரியும் முத்துப்பாண்டியன் வேலை முடிந்து பேருந்து நிறுத்தும் இடத்தில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது வினோத்தின் சட்டை பையில் இருந்த 2300 ரூபாய் பணம், செல்போன், பேருந்து டிக்கெட் வருமானம் ஆகியவற்றை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். இதுகுறித்து வினோத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் பணத்தை திருடிய 14 வயது சிறுவனை கைது செய்தனர்.