திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரவுண்ட் ரோடு பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காமராஜர் பேருந்து நிலையம் அருகே இனிப்பு தயாரிக்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் பல்வேறு வகையான இனிப்புகளை தயாரிக்கும் பணி நடைபெற்றது. இதனையடுத்து கடையை பூட்டிவிட்டு கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்றார்.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் இருந்து கரும்புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்m ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.