சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக இருக்கிறார். இந்நிலையில் சங்ககிரி பகுதியில் இருந்து ஆனைமலைக்கு பஞ்சு கட்டிகளை ஏற்றிக்கொண்டு கோவிந்தராஜ் சரக்கு லாரியில் சென்று கொண்டிருந்தார். கிளீனரான இருசப்பன் என்பவர் உடன் இருந்தார்.

இந்நிலையில் சுந்தரபுரி பகுதிக்கு அருகே வைத்து ஒரு பள்ளத்தில் லாரியின் சக்கரம் இறங்கியவாறு நின்றது. உடனே கோவிந்தராஜ் லாரியை திருப்ப முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோவிந்தராஜன், இருசப்பன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.