தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் கோபாலகிருஷ்ணன் சாமி கோவில் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஜூமாகான் மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிறுவன் உள்பட இரண்டு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.