கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீலிக்கோனம்பாளையம் ஆர் கே கே நகரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். கடந்த ஆண்டு கிருஷ்ணவேணி சிங்காநல்லூரில் இருக்கும் பைனான்ஸ் நிறுவனத்தில் 69 கிராம் தங்க நகை அடகு வைத்து 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கினார்? நீண்ட நாட்களாக அவர் வட்டியும் அசலும் செலுத்தவில்லை. இதனால் நகையை ஏலத்தில் விட பைனான்ஸ் நிறுவனத்தினால் முடிவு செய்தனர்.

அதன்படி நகையை பரிசோதனை செய்து பார்த்தபோது அது தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகை என்பது தெரியவந்தது. இதுகுறித்து பைனான்ஸ் நிறுவனத்தினர் கிருஷ்ணவேணியை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பணத்தை திருப்பி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் கூறியபடி அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் பைனான்ஸ் நிறுவனத்தின் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பெயரில் கிருஷ்ணவேணி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.