திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் கல்லாங்காடு வலசு பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். சுமார் 50 ஆடுகளை தங்கவேல் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு பிறகு ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதை கண்டு தங்கவேல் அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வெறிநாய்களை அங்கிருந்து விரட்டி அடித்தார். அதில் ஆறு ஆடுகள் உயிரிழந்தது. ஒரு ஆடு மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. கடந்த சில மாதங்களாக அந்த பகுதியில் வெறி நாய்கள் 100-கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.