கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி திவ்யதர்ஷினியின் தாய் ராணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யதர்ஷினி கல்லூரியில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை சக மாணவர்கள மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று திவ்யதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.