சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் மெயின் ரோட்டில் சிவசந்திரன்- திலகவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு வயது பெண் குழந்தை யஸ்விதா கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் டைபாய்டு காய்ச்சல் இருந்தது உறுதியானது. அந்த குழந்தைக்கு ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர்.

நேற்று முன்தினம் திலகவதி கண்வழித்து பார்த்தபோது குழந்தை அசைவில்லாமல் படுத்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி தனது குழந்தையை அம்பத்தூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.