தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல சண்முகபுரம் கிராமத்தில் இன்ஜினியரான ராஜதுரை(28) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 17-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் இருக்கும் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அவர் ஷேர் மார்க்கெட் அலுவலக பணியில் இருப்பதாக கூறியுள்ளார். தினமும் 10 மணிக்கு வெளியே செல்லும் ராஜதுரை விடுதிக்கு வந்து விடுவார். சம்பவம் நடைபெற்ற அன்று ராஜதுரை அறை கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மர்மமான முறையில் கழிவறையில் ராஜதுரை இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜதுரை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? எனது விசாரணை நடத்தி வருகிறார்கள்.