கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை பகுதியில் செல்வ ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த வைத்தியர். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரிய தங்கம் உயிரிழந்தார். இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த ஜார்ஜ் தனது மனைவிக்கு இறுதி சடங்கு நடந்த போது இன்னொரு குழியையும் தோண்டி தயாராக வைத்திருங்கள் என தெரிவித்துள்ளார்.

அவர் மன வேத வேதனையில் கூறுவதாக அனைவரும் நினைத்தனர். ஆனால் தனது வீட்டில் வைத்து ஜார்ஜ் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.