ஆந்திர பிரதேச மாநிலத்தில் அரக்கு கனேலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இரவு நேரத்தில் மட்டன் சாப்பிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இரவு படுத்து தூங்கிய நிலையில் திடீரென அனைவருக்கும் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர்  மீட்டு  அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பெற்று வந்த மீனாட்சி என்ற 9 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மீதமுள்ள 8 பேரில் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.