திமுகவின் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் எழுப்பியுள்ள இந்தச் சட்டப்பூர்வமான மற்றும் அரசியல்ரீதியான கேள்விகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது பதவியேற்பின் போது அரசியல் சாசனத்தின்படி எடுத்துக்கொண்ட “ரகசியக் காப்புப் பிரமாணத்தை” (Oath of Secrecy) மீறிச் செயல்படுகிறாரா என்ற மிகத் தீவிரமான குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார். முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டங்கள், அரசுத் துறை ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் மிக உயரிய ரகசிய ஆலோசனைகளில் திரு. ஜான் ஆரோக்கியசாமி மற்றும் திரு. விஷ்ணு ரெட்டி ஆகிய இருவர் தொடர்ந்து பங்கேற்று வருவதுதான் இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் முதலமைச்சர் விஜய்யின் மிக நெருங்கிய நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் என்று கூறப்படும் நிலையில், தமிழக அரசு நிர்வாகத்தில் அவர்கள் என்ன அதிகாரப்பூர்வ பதவியில் இருக்கிறார்கள் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. அரசு ஊழியர்களாக இல்லாத பட்சத்தில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே இவர்களுக்கென்று தனி அறைகள் (Chamber) ஒதுக்கப்பட்டிருப்பது எப்படி என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மிக ரகசியமான ஆவணங்கள் பரிமாறப்படும் மற்றும் கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் அமைச்சரவைக் கூட்டங்களில், எந்தவொரு அரசுப் பதவியிலும் இல்லாத வெளிநபர்கள் எந்த அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>CM Vijay breaches his oath of secrecy! <br><br>Serious questions emerge concerning the presence of Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by Hon. Chief Minister Thiru C. Joseph Vijay.… <a href=”https://t.co/B84ASttASQ”>pic.twitter.com/B84ASttASQ</a></p>&mdash; P. Wilson (@PWilsonDMK) <a href=”https://x.com/PWilsonDMK/status/2070738473854878199?ref_src=twsrc%5Etfw”>June 27, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>

அரசியல் சாசன நெறிமுறைகள் மற்றும் அரசு அலுவல் விதிகளை (Rules of Business) மீறி, இத்தகைய நபர்களை உயர்மட்டக் கூட்டங்களில் ஈடுபடுத்துவது முதலமைச்சரின் ரகசியக் காப்புப் பிரமாணத்திற்கு எதிரான அப்பட்டமான விதிமீறலாகும் என்று திமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, தமிழக முதலமைச்சர் உடனடியாக இந்த இரு நபர்களின் அதிகாரப்பூர்வ பதவிகள் என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என்றும் எழுந்துள்ள கோரிக்கைகள் தற்போது சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளன.