நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள துவாரகா செக்டார்-1 பாலம்கோ ரோடு பகுதியில், நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரமான ரோட் ரேஜ் (Road Rage) சண்டை ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களையும் உலுக்கியெடுத்துள்ளது. ஒரு கேப் டிரைவருக்கும், ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட ஸ்கோடா ரேபிட் (Skoda Rapid) காரை ஓட்டி வந்த ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறு, பின்னர் அடிதடி ரகளையாக மாறியுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள அந்த முக்கிய சாலையில், சுற்றியிருந்த பொதுமக்கள் இந்த அதிர்ச்சி காட்சியைத் தங்களது மொபைல் போனில் படம் பிடித்து சோசியல் மீடியாவில் பகிர, அது தற்போது மில்லியன் கணக்கான வியூஸ்களைக் குவித்து வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட கேப் டிரைவர் அளித்துள்ள புகாரின்படி, அந்தப் பெண் ஓட்டி வந்த ஸ்கோடா கார்தான் முதன்முதலில் இவரது டாக்ஸி மீது வேகமாக வந்து இடித்துள்ளது. கார் இடித்தவுடன் கீழே இறங்கிய அந்தப் பெண்ணும், அவருடன் காரில் வந்த இன்னொரு நபரும் சேர்ந்து கொண்டு, நடுரோட்டிலேயே பெரிய சண்டையை ஆரம்பித்துள்ளனர். அந்தப் பெண் தன்னை மிகக் கொடூரமான கெட்ட வார்த்தைகளால் திட்டி, கைகளாலேயே அலாக்காகத் தள்ளிவிட்டுத் தாக்கியதாக அந்த கேப் டிரைவர் குற்றம் சாட்டியுள்ளார். வைரலாகும் வீடியோவில், அந்தப் பெண் கேப் டிரைவரை கோபமாகத் தள்ளி விடுவதும், அப்போது அங்கிருந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர் உடனடியாக உள்ளே புகுந்து இருவரையும் கஷ்டப்பட்டுப் பிரித்து விடுவதும் அப்பட்டமாகத் தெரிகிறது.
New Delhi – A heated road rage confrontation between a woman driving a Skoda car and a cab driver erupted in the middle of Palam Road near Dwarka Sector-1, Delhi, with the dramatic exchange captured on video. According to the taxi driver, the incident began when the Skoda car… pic.twitter.com/3VfcCALnHp
— NextMinute News (@nextminutenews7) June 27, 2026
சுற்றி நின்ற நூற்றுக்கணக்கான மக்கள் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு இந்த டிராமா பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து, டெல்லி போலீஸார் இந்த வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அந்தச் சாலையில் உள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகள் மற்றும் இதர ஆதாரங்களைச் சேகரித்து, இந்த மோதலுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான பின்னணி என்ன என்று டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை இடித்தது மட்டுமில்லாமல், நடுரோட்டில் வச்சு கேப் டிரைவரை ஒரு பெண் தாக்கிய இந்தச் சம்பவம் தற்போது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
