சேலம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அங்குள்ள ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் வியாபாரமும் ஜோராக நடந்தது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து இயற்கையை கண்டு ரசித்தனர். இதேபோல பூலாம்பட்டி படகு இல்லம், மேட்டூர் அணை பூங்கா, ஆத்தூர் முட்டல் நீர்வீழ்ச்சி ஆகிய அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.