சென்னை மாவட்டத்தில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி தெரசா சேலையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று காலை தெரசா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் மப்பேடு அருகே சென்ற போது ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த தெரசா மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக அலெக்சாண்டர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தெரசாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.