கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரம் பகுதியில் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சப்பூ ராஜா(41) என்பது தெரியவந்தது.

அவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜாவை  அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வகுப்பறையில் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கல்வி துறை அதிகாரிகள் பச்சப்பூ ராஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தனர்.