திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சுதர்சன் சக்திவேல்(18) திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நாகராஜ் தனது வீட்டிற்கு பின்புறம் பண்ணை அமைத்து வாத்து மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை சுதர்சன் சக்திவேல் கல்லூரிக்கு செல்வதற்கு முன்பு கோழி மற்றும் வாக்குகளுக்கு இரை வைப்பதற்காக சென்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு சுற்றுசுவரை ஒட்டியபடி இருக்கும் மின் கம்பியை சுதர்சன் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.