தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சென்னம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மூன்று மாணவர்கள் அனுமந்தபுரம் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மூன்று மாணவர்களும் தங்களது வீட்டிற்கு அருகில் வைத்து சாணி பவுடரை கலக்கி குடித்தனர். இதனையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவர்கள் சாணி பவுடரை கலக்கி குடித்ததாக சக மாணவர்களிடம் கூறியுள்ளனர்.

இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மூன்று மாணவர்களையும் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவர்கள் சாணி பவுடரை குடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.