சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் 2-வது தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தீப்திகா மயிலாப்பூர் ராமகிருஷ்ணா சாலையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து தீப்திகா அருகில் இருக்கும் தோள் வீட்டிற்கு படிக்க சென்று விட்டார். இதனையடுத்து இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த தீப்திகா திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து விளையாட சென்று விட்டு வீட்டிற்கு வந்த தீப்திகாவின் அண்ணன் ரித்தீஷ் தனது தங்கை எங்கே என தேடி பார்த்தார். இதனையடுத்து நீண்ட நேரமாக அறை கதவு திறக்கப்படாமல் இருந்தால் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது தீப்திகா தூக்கில் சடலமாக தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர் இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.