கடலூர் மாவட்டத்தில் உள்ள டி.ராசா பாளையம் கிராமத்தில் அசோக் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி பள்ளி முடிந்து ஹரிஷ் தனியார் பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் திருவதியை அணைக்கட்டு அருகே சென்றபோது நரிமேடு கிராமத்தில் வசிக்கும் தினேஷ் அவரது நண்பர்கள் இணைந்து ஹரிஷை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ஹரிஷின் குடும்பத்தினர் பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரிலும், நான்கு முனை சந்திப்பு அருகிலும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் 36 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.