தென் சென்னை பாராளுமன்ற தொகுதி பாஜக செயல்வீரர் கூட்டத்தில்  பேசிய பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை, நீங்கள் மக்களிடம் எடுத்து சொல்லணும். அந்த அளவுக்கு பொலிட்டிகள் நாலெட்ஜ் உங்களுக்கு இருக்கணும். அந்த அளவுக்கு நீங்கள் புத்தகம் படிக்கணும். இது போன்று  தலைவர்கள் பேசுவதை கேட்கணும்…..  நீங்க பேசுறதை நாங்க கேட்கணும்…  மக்களிடம் எந்த விஷயத்தை எவ்வளவு சுலபமாக எடுத்து சொல்லணும்.

இன்வெஸ்டர் மீட் சிம்பிள்ளாக… அதை பிரிச்சு  சொல்லுவீங்க…. இவன் சொல்லுற பொய்யை எப்படி உடைப்பீங்க  ? 35 அமைச்சர்களில் 11 பேர் மீது இன்னைக்கு ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அதை எப்படி சொல்லுவீங்க ? ஒரு அமைச்சர் இந்தியாவில் எங்கேயும் இல்லாத அளவுக்கு ஏழு மாத காலமாக புழல்  சிறையில் ஒரு வேலையும் செய்யாமல் ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டு இருக்காரு செந்தில்பாலாஜி…. 

அமைச்சருக்கு சம்பளம்னா வேலை செஞ்சாதான் கொடுக்கணும்.  ஒரு பஜ்ஜி கடையில் பஜ்ஜி போட்டா கூட பஜ்ஜி எடுத்தா தான் அக்காவுக்கு காசு. ஆனால் எதுவுமே இல்லாம புழல் சிறையில் கம்பி என்பதற்கு ஒரு அமைச்சருக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கின்றோம். இதை நீங்க சொல்லுங்க என தெரிவித்தார்.