ஆம்ஆத்மி  கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். ஆம் ஆத்மியின் 7 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயன்றதாகவும், கட்சி மாறியவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக எம்எல்ஏக்கள் இன்னும் எங்கள் எம்எல்ஏக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும் மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப் போவதாக பாஜக மிரட்டல் விடுவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.