செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவின் மாநில தலைவர் MP ரஞ்சன் குமார் , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு,  குஷ்பூ இன்றைக்கு சினிமா துறையில் பிரபலமாகி, திமுக கட்சியில்  எப்படி இருந்தார்கள். திமுக கட்சியில் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா ? என்று காத்துக் கொண்டிருந்தார்கள்..  திமுக கட்சியில் இருந்தவர்கள் குண்டர்கள் மாதிரி செயல்படுகிறார்கள் என்று சொல்கின்றார்.

குஷ்பூ மல்லாக்க படுத்துக்கொண்டு எச்சி துப்புகிறார்கள். இன்றைக்கு குண்டர்கள் எல்லாம் அதிகமாக இருக்கின்ற ஒரே கட்சி எது என்றால் பாஜக. ரவுடி, கேடி, பொறுக்கி  எல்லோரும் பாஜக கட்சியில் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் தேடி தேடி இணைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. இது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும்.

ஆனால் தான் கட்சியில் குண்டர்களை வைத்துக்கொண்டு,  எந்த கட்சி வாய்ப்பு கொடுத்ததோ, எந்த கட்சியில் வளர்ந்தார்களோ…  அந்த கட்சி மேல் இன்னைக்கு குறை சொல்கின்றார்கள். அதேபோல குஷ்பூ அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பொழுது எவ்வளவு பெருமைக்குரியவர்களாக… இந்த கட்சியில் வைத்திருந்தோம்.  காங்கிரஸ் கட்சியில் இருக்கும் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும் என்ற நிலையில் இருந்தார்கள் என தெரிவித்தார்.