நேற்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா தனது படம் குறித்த ஏராளமான அப்டேட்களை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், படத்திற்கான அடுத்த அப்டேட் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது கங்குவா திரைப்படத்தின் அப்டேட்-உடன் சூர்யாவின் மற்ற படங்களுக்கான  அப்டேட்களும்  இணையதளத்தில் பரவி வருகின்றன. அதன்படி, நடிகர் நேற்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்த சூர்யா, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன்,

தன்னுடைய படங்கள் குறித்தான தகவல்களையும் அளித்துள்ளார். அதன்படி கங்குவா திரைப்படம் நீங்கள் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக இருக்குமெனவும், சுதா கொங்காரா இயக்கும் என்னுடைய  43வது படத்திற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாகவும், உங்கள் அனைவருக்கும் பிடித்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிரத்யேக கதை ஒன்றை  எழுதியுள்ளார்.

அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் ரோலக்ஸ் காண தனி ப்ராஜெக்ட் தொடங்கப்படும். அதேபோல் விடுதலை பாகம்-2 க்கான சூட்டிங் படப்பிடிப்பு முடிந்த பிறகு வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.