லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் மாத வார இறுதியில் லியோ படத்திற்கான  இசை வெளியீட்டு விழா நடைபெறும் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி,

அக்டோபர் ஐந்தாம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புக்கிட்  ஜாலில் அரங்கத்தில் லியோ படத்திற்கான பிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகுதான் ப்ரீ  ரிலீஸ் நிகழ்வுகள்  நடைபெறும். அதன்படி,

தமிழகத்தில் இசை வெளியீட்டு விழா  நடைபெற்ற பிறகு லியோ பட குழு மலேசியா,, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே  செப்டம்பர் வார இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழா நிகழ அதிக வாய்ப்புள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.