அஜித் ரசிகர்கள் குறித்து பாடல் ஆசிரியர் சூப்பர் சுப்பு தெரிவித்த கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் சூழ்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள Hukum  பாடல் வெளியான நாள் முதல் இன்று வரை சர்ச்சையை கிளப்பி வருகிறது. அப்பாடலுக்கான வரிகளை எழுதிய சூப்பர் சுப்பு என்பவர் தற்போது அஜித் ரசிகர்கள் குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,

நான் பார்த்தவரையில் அஜித் ரசிகர்கள் தான் நேர்மையான ரசிகர்கள். அவரது படங்கள் வெற்றியை பெறுகிறதோ, இல்லையோ அவர் படங்கள் ரிலீஸ் ஆகிறதோ இல்லையோ அவரது ரசிகர்கள் அவருக்கு நேர்மையாக இருக்கிறார்கள். அவரை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள் எனவே பிறர் ரசிகர்களை விட அஜித் ரசிகர்களே நேர்மையையானவர்கள் என தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே நேர்காணல் ஒன்றில் ரஜினி குறித்து பேசுகையில் இவர் மறைமுகமாக நடிகர் விஜய் அவர்களை சீண்டுகிறார் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது அஜித் ரசிகர்களை பற்றி  பேசியதும்  சர்ச்சையை கிளப்பியுள்ளது. மற்றொருபுறம் அஜித் ரசிகர்கள் AK அவர்களின் படப்பிடிப்பு தொடங்கி படம் ரிலீஸ் ஆகுதோ இல்லையோ ரஜினிக்கு எழுதியது போல் அஜித்துக்கும் ஒரு பாடலை எழுதி தாருங்கள் அதை வைத்து கொண்டாடி மகிழ்ந்து கொள்கிறோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.