ஓசூர் அருகே ஆளில்லா வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவக்குமார் நகர் பகுதியில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்தனர்.

இதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் கொள்ளையர்கள் வீட்டிற்குள்ளே சென்றவுடன் வீட்டின் கதவை அடைத்து பூட்டு போட்டனர். பின்னர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே இருந்த கொள்ளையர்கள் மூன்று பேரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.