ரேஷன் கார்டு வைத்துள்ள சிலருக்கு அரசு இலவசமாக சில உணவு தானியங்களை வழங்கி வருகிறது. அரசின் இலவச ரேஷன் திட்டத்தை பெற்று வருபவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்பது தான். ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசானது மக்களை வலியுறுத்துகிறது. எனினும் இதுவரை கோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்படவில்லை.

உங்களது ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படவில்லை எனில், ரேஷன் கார்டு அரசால் ரத்துசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பு செயலை மேற்கொள்வதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 என கூறப்பட்டிருந்த நிலையில், இப்போது இந்த காலக்கெடு ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 30, 2023-க்குள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் இணைக்கப்படாவிட்டால் உங்களின் ரேஷன் அட்டை தானாகவே ரத்து செய்யப்படும். அதோடு ஜூலை 1 முதல் ரேஷனில் கிடைக்கும் இலவச கோதுமை மற்றும் அரிசி போன்ற உணவு தானியங்கள் உங்களுக்கு கிடைக்காது. ரேஷன் அட்டை ரத்து செய்யப்பட்டுவிட்டால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.