திருப்பதியில் காணாமல் போன சென்னை சேர்ந்த இரண்டு வயது குழந்தை அருள்முருகன் மீட்கப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த சந்திரசேகர் – மீனா தம்பதிகள். இரண்டு வயது சிறுவன் அருள் முருகன் இவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது,  அங்கு அதிக அளவு கூட்டம் இருந்த காரணத்தால் இரண்டு நாள் அங்கே தங்கி சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் திருமலையில் இருந்து திருப்பதிக்கு வந்தபோது சென்னைக்கு செல்வதற்காக பேருந்து இல்லாததால் பேருந்து நிலையத்தில் உறங்கி இருந்தார்கள்.

அப்போது அவர்களுடைய இரண்டு வயது சிறுவனை ஒருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.  இது குறித்து காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார்கள். காவல்துறையினரும் தனிப்படை அமைத்து  தேடுதல் வேட்டை நடத்தினர். அதேபோல பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள், கடைகளில் இருக்கக்கூடிய சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை  ஆய்வு செய்தார்கள்.

அதில் ஒருவர் அந்த குழந்தையை கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் திருப்பதி நகர முழுவதுமே தொடர்ந்து தேர்தல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போதுதான் குழந்தையை கடத்தியவர் சுதாகர் என்று தெரிகிறது. அவர் அவருடைய சகோதரி வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு தப்பி சென்றதாக கருதப்படுகிறது. தற்போது அவரை தேடும் பணியில் காவல்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.