திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு ஆகிய அணைகளில் இருந்து 2000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்நிலையில் மழை மற்றும் நீர்வரத்தை பொருத்து தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ஆம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.