சென்னையில் இருந்து ஏராளமானோர் தொடர் விடுமுறை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்கின்றனர். நாளை மக்கள் மீண்டும் சென்னைக்கு புறப்படுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூட்ட நெடுகளை தவிர்க்கும் பொருட்டு கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த ரயில் நாளை இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும்.

அதன் பிறகு மறுநாள் காலை 10 மணிக்கு ரயில் சென்னை எழும்பூர் சென்றடையும். இதேபோல 29-ஆம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1 மணிக்கு ரயில் புறப்படும். அந்த ரயில் 30-ஆம் தேதி 2. 45 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடையும். இதேபோல கோவையில் இருந்து சிறப்பு ரயில் நாளை 11:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும். 29-ஆம் தேதி சென்ட்ரலில் இருந்து மதியம் 1:47 மணிக்கு புறப்படும் ரயில் 11.05 மணிக்கு கோவையை வந்தடையும்.