ஈரோடு மாவட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையத்தில் குருசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்த வேலைக்காக பேருந்து நிலையம் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் சுற்றித்திரிந்த மாடு திடீரென வந்து குருசாமியை முட்டி தூக்கி வீசியது. இதனால் குருசாமி காயமடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டுகள் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலையோரம் சுற்றி திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.