தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒடசல்பட்டி பத்திரகாளி கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் தனியார் பேருந்தில் திருச்சியில் நடைபெறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கு சென்றனர். இந்நிலையில் பொம்மிடி பகுதியில் சென்ற போது வைக்கோல் பாரம் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.