திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் மக்கள் கூடும் பல்வேறு இடங்களில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கிறது.

இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். விடுமுறை பண்டிகை காலங்களில் அதிக அளவு போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெள்ளி நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் நகர், மோயர் பாயிண்ட், சதுப்பு நிலக்காடுகள், குணா குகை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.