தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 177 வது ஆராதனை விழா வெகு விமர்சையாக தொடங்கியது. தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி வரை நாள் தோறும் காலை முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கர்நாடக சங்கீத மகான் சத்குரு தியாகராஜர் 27,000 கீர்த்தனைகளை இயற்றி பாடியுள்ளார். அவரது புகழை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஐந்து நாட்கள் இசைக்கலைஞர்கள் திருவையாறில் ஒன்று கூடி ஆராதனை விழா எடுப்பது வழக்கம்.