தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் கனமழை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு மக்கள் வீடுகளை இழந்து உணவு, தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதனால் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் பேரிடர் மீட்பு பணிகளை செய்து வருகிறது. அதன்படி அணையா சமையல் கூடத்தில் மூலம் ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் உணவு பொட்டலங்கள் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.